tamil - maveeran

மாற்றான் குண்டுகள் - உன் மர்பைத் துளைத்தனவோ!
மாமனிதன் உன்னை மண்ணில் சாய்த்தனவோ!
சிதறிய தேங்காய் போல் சில்லாகிப் போனாயோ!
அன்றி நரிகள் கையில் சிக்காது நஞ்சை நீ மென்றாயோ!
சூரியக் கதிர் சமர்தனிலே சூரியன் நீ அணைந்தாயே!
ஈன்றெடுத்த மண்தனிலே இரத்த விதை விதைத்தாயே!
மாவீரர் சமாதியிலே மறவனாய் மலர்ந்தாயே வெளிநாட்டுத் தமிழருக்கும் வெகுட்சி வரச் செய்தாயே!
வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே வேங்கையாய் பாய்ந்தவனே வேட்டை ஆட வந்தவரை வெட்டிப் புதைத்தவனே ஊர் உறவு வாழ்வதற்காய்

உறங்காமல் உழைத்தவனே!
உறங்காமல் உழைத்ததினால் - இன்று உறக்கத்தில் போனாயோ!
தானைத் தலைவன் ஆணைப்படி அணி வகுத்த புலிகளைப் பார் படையெடுத்த பகைவர் கொடி பாதியிலே எரிந்ததைப் பார் முப்படை மூடரெல்லாம் முல்லையிலே முறிந்ததைப் பார் கூவி வந்த கூட்ட மின்று குரலிழந்து போனதைப் பார் மண்ணோடு நீ கலந்து மலராகிச் சிரிக்கின்றாய் விண்ணோக்கி நான் பார்த்தால் விண் மீனாய் ஒளிர்கின்றாய் வாள் ஏந்தும் வீரருக்கு வேராக நிற்கின்றாய் விடிவு தேடும் மக்களுக்கு விடிவெள்ளி நீ தானே.

tamil - siru kathai - khalghal

அன்று ஒரு வேலை விசயமாக நான் சென்னை கிளம்பினேன், அதற்காக ரயில் ஏற சென்றேன் . கொல்கத்தா ரயில் சந்திப்பில் அன்று பலத்த கூட்டம் காணப்பட்டது , ஒவ்வொருவரும் தன் இரண்டு கைகளிலும் பெட்டிகளை பிடித்து கொண்டு வேகவேகமாக அந்த நெருக்கடியில் நடந்து சென்றார்கள் .சிலர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களுடன் பைப்பில் முட்டிமோதி கொண்டிருந்தார்கள் . அந்த நெருக்கடியில் ஒரு தமிழ் குரல் ஒலித்தது ." அம்மா யாராவது கொஞ்சம் தருமம் பன்னுகளேன் ,கால் இல்லாத நொண்டிம்மா"நான் அந்த சத்தம் கேட்ட பக்கம் திரும்பி பார்த்தேன் . பல பீடி விளம்பர தாள்கள் ஒட்டிஇருந்த சுவரில் சாயுந்துஇருந்தன். அவனுடைய இரண்டுஊன்று கோலையும் பான் எச்சில் படிந்த சுவரில் சாய்த்து வைத்துஇருந்தான்.அவனுக்கு இரண்டு கால்களும் முட்டிவரை துண்டிக்கபட்டுஇருந்தது . அதில் வெள்ளை துணி சுற்றிருந்தன் ,அந்த துணியை விட்டு ரத்தம் சிறிது வெளியே கசிந்துஇருந்தது . அதை பார்த்த எனக்கு அவ்வளவாக பரிதாபம் ஏற்படவில்லை ,இது போன்று சென்னையில் நிறைய உண்டு ,ஆனால் அதை பற்றி அவர்களிடம் விசாரிப்பதில் எனக்கு ஒருவித ஆர்வம் உண்டு. நான் என்னை அவனிடம் காட்டி கொள்ளவில்லை , என் என்றால்அவன் தமிழன் என்னிடம் உதவி கேட்டால் ? நானே நாய்போல் ஊரூராக சுற்றி சம்பாதிக்க வேண்டும் இதில் நான் எங்கு அவனுக்கு உதவி செய்வது .இதல்லாம் நடக்குரகாரியமா ? இருந்தாலும் அவனை அந்த இடத்தில் விட்டுவர எனக்கு மனமில்லை .அவனிடம் பேச்சு கொடுக்கலாம் என்று வாயை திறந்தேன் ,அப்போது ஹிந்தியில் கண்ணியமான பெண்க்குரல் கேட்டது ரயில் இரண்டு மணிநேரம் தாமதமாம், உடனே ரூமுக்கு போய்விடலாம் என்று யோசித்தேன் ,பிறகு மெல்ல அவனருகே சென்றேன் அவன் என்னை உற்று கவனித்தான் .உன் பேரு என்னவேன்று மட்டும்தான் கேட்டேன் , அதற்கு அவன் ,"அய்யா என்பேரு காசிலிங்கம், எதாவது உதவி பன்னுகய்யா ,இத்தனை நாளாய் இங்க ஒரு தமிழ் ஆளுக்குட வரலைய்யா ,நீங்களாவது எனக்கு எங்க ஊருக்கு போக டிக்கெட் வாங்கிதாங்கய்யா " அவன் பேசிக்கொண்டே இருந்தான் ஆனால் எ பார்வையும் மனதும் அவன் காலை சுற்றி இருக்கும் ஈக்களை போலவே அவன் காலை சுற்றி வந்தன.அவன் எனமுகதின்முன் கை அசைத்துகாட்டி அவன் பக்கம் என் கவனத்தை திருப்பினான் ."உங்களுக்கு எப்டி இந்த்கால் போச்சு " என்று கேட்டேன் .எவ்வளவுதான் கடுபடுதினாலும் என் கண்கள் அவன் கால்களையே நோக்கின ."அய்யா நான் மட்டும் இங்க வரலைய்யா என்னோட என் தம்பியும் வந்தான்"எதற்க்காக இங்க வந்திங்க என்று நான் கேட்பதற்குள் ,"நான் பொறந்ததே வெனய்யா வென ,எல்லாரும் வெளிநாட்டுக்கு பொய் சம்பாதிகுராங்கனு நானும் என் தம்பியும் ஒரு ஏஜென்சி முலமா பணத்த கட்டுனோம் ,அவனும் எங்கள சென்னைக்கு கூட்டிவந்தான் .ஒரு ரயிலுல ஏத்திவிட்டு இதுல போய் கொல்கட்டால ஏறங்குக எங்களுங்க உங்கள சிங்கப்பூருக்கு அனுப்புங்கனு சொன்னான் .அத நம்பி ரயில்ல ஏறுனோம் .இங்க வந்து இறங்கினா ஒருத்தனையும் காணோம் ,அப்படியே பெட்டிபடுக்கயோட வெளியே வந்து நானும் என் தம்பியும் ஒரு ஆட்டோ புடிச்சோம் ,சென்னைல அந்தாளு கொடுத்த விலாசத்த வச்சு அந்த எடத்துக்கு போன அது பொய் விலாசம். வந்த ஆட்டோல திரும்பி ரயிலுக்கு போய்டலாம்னு போனா எங்க பின்னாடியே எமன் பல்ல காட்டிகிட்டு வந்துருக்கான் சாமி ,ஆட்டோ பஸ்ல மோதி என் தம்பி அந்த எடதுலையே இறந்துட்டான்யா ,அப்புறம் பர்தா ஒரு நாத்தம் புடிச்ச ஆசுபுதிரில கால் இல்லாம நான் கிடந்தேன் .என் தம்பி எங்கனு கேட்டேன் அதுக்கு அவங்க சொன்னதும் மொழி தெரியாம புரியலையா ,அப்பதான் என் தலையுல உரைச்சது ,சொந்த ஊர்ல ராஜா மாறி வாழ்றதாவுட்டு காசுக்கு ஆசைப்பட்டு வந்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ,அன்னைகிருந்து ஊருக்கு போக காசுஇல்லாம ஒரு வராம பிச்சை எடுத்து காசு சேத்துக்கிட்டு இருக்கன். நீங்கதான் எதாவது உதவி செய்யணும் அய்யா ,எங்க ஊர்ல நாங்க சிங்கபூர்ல இருக்காத நெனச்சிக்கிட்டு இருபாங்க , வாங்க முன்னாடி இப்டி கால் இல்லாம போய் நிக்க வெக்கமா இருக்கு ,ஆனா போகாம இருந்தா இங்க அனாத பொணமா கிடப்பன் சாமி .உங்கள பார்தப்ரம் தன் இப்ப நம்பிக்கைய இருக்கன் ,டிக்கெட் எடுத்துகுடுபிங்கலய்யா"அப்போது மீண்டும் கண்ணியமான பெண் குரல் கேட்டது சென்னை ரயில் இன்னும் சற்று நேரத்தில் புறபடபோவதாக, அதை கேட்டதும் என் மனச்சாட்சி என்னும் அறைலிருந்து சட்டென்று வெளியே குதித்தேன் .என் அப்பா ஆசுபுதிரியில் இருபது ஞாபகம் வந்தது ,அவன் தன் பொருள்களை மூட்டைகட்டும்போது அவனுக்கு தெரியாமல் ரயிலில் ஏறிவிட்டேன் .

tamil - manathodu malai kalam

ஒரு அழகான நாளின் ........
இள மாலை வேளையிலே .......
நீர்த் துளிகள் சிலபுவியை நோக்கிச் சிதறின........
ஒரு வானவில்...............
ஒரு கோப்பை தேநீர்..........
அளவற்ற மகிழ்ச்சி...........
அளவோடு புன்னகை..........
சட்டென்று நொடிப்பொழுதில் உலகம் அழகானது..........
சொற்கள் பற்றவில்லை..........
கற்பனைகள் போதவில்லை...........
வர்ணனைகள் மிச்சமில்லை........
கனவுகளும் மீதமில்லை.......
இரசனைகளால் இப்புவியின் எழிலை அளந்த பொழுது...........

என் உலகில்,இதயம் தன்இரசனை சிறகுகளைகட்டும் போதெல்லாம்.........
கொஞ்சம் தேநீர்........ நிறைய வானம்........

tamil - kovil kadavuluku mattualla ...

தமிழகத்தில் வள்ளுவர், ஔவை, இளங்கோ, கம்பன், பாரதி, பாரதிதாசன் துவங்கி கண்ணதாசன் வரை சிலைகள் அமைக்கபட்டுள்ளன. பிறந்தநாள், நினைவுநாளில் மாலைகள் போடப்படுவதோடு அவர்களுக்கான இடம் முடிந்து போகிறது. இன்னொரு பக்கம் பல தமிழக கோவில்களில் தமிழ்கவிஞர்களுக்கு தனியான சன்னதிகள் காணப்படுகின்றன. கவிஞர்கள் கடவுளுக்கு சமமாக வணங்கப்படுகிறார்கள். இந்த முரண் வியப்பானது.
வெவ்வேறு காரணங்கள் பிரார்த்தனைக்காக கோவிலுக்கு பலரும் சென்று வருவது போல பிரசித்தி பெற்ற தமிழ்கவிஞர்களை அறிந்து கொள்ளவும் அவர்களின் உருவச்சிலைகளை காண்பதற்காகவும் ஒரு தனிப் பயணம் போய் வரலாம்.
சென்னையில் இரண்டு கவிஞர்களுக்கு கோவில்கள் உள்ளன. ஒன்று மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோவில். திருவள்ளுவர் சமண சமயத்தை சேர்ந்தவர் என்றே கூறப்படுகிறது. ஆனால் குறள் நெறி சமயபேதமின்றி சகலருக்கும் பொருந்தக்கூடியதே.
மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரிக்கு கிழக்கு பக்கமாகவும் முண்டக்கண்ணி அம்மன் கோவிலின் மேற்கு பக்கத்திலுமாக உள்ளது இந்த திருவள்ளுவர் கோவில். சிறிய கோவில் . மிக பழமையானது என்கிறார்கள். உள்ளே திருவள்ளுவர் பிறந்த இடம் என்று கம்பிஅழியிடப்பட்ட ஒரு மேடையிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் . இங்கே வள்ளுவரின் மனைவி வாசுகியின் சிலையும் காணப்படுகிறது. திருவள்ளுவர் நினைவுநாளான மே - ஜுன் மாதத்தில் உள்ள உத்திரை நட்சத்திரத்தில் இங்கு அன்னதானம் அளிக்கபடுகிறது என்றும் கேள்விபட்டேன்.
வள்ளுவர் யார் என்பது பற்றிய முழுமையான சான்றுகள் இன்றுவரை நமக்கு கிடைக்கவில்லை. இன்று நாம் காணும் வள்ளுவரின் உருச்சித்திரம் கற்பனையாக வரையப்பட்டதே. திருக்குறளுக்கு என்று மட்டுமே தனி நூலகங்கள் இருக்கின்றன. குறள் நெறியில் வாழ்வை முன்னெடுத்து செல்லும் தவச்சாலைகள் கூட உள்ளன.
நான் அறிந்தவரை திருவள்ளுவருக்கு கோவில் இருப்பது சென்னையில் மட்டுமே.
இதுபோலவே பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாருக்கு சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் தனிக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சேக்கிழார் தான் மூலவர். அவரது திருவுருவச்சிலையும், கோவில் சுவர்களில் சோழ அரசன் அநபாய சோழன் கேட்ட கேள்விக்கு சேக்கிழார் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டி சொன்ன பதில்கள் காணப்படுகின்றன.
வடசென்னைப்பகுதியில் உள்ள திருவெற்றியூரில் பட்டினத்தார் அடங்கிய இடம் தனியான சன்னதியாக வழிபடப்பட்டு வருகிறது. அதுபோலவே திருவெற்றியூரில் சூபிக்கவிஞர் குணங்குடி மஸ்தான் சாகிபு நினைவு தர்க்காவும் காணப்படுகிறது.
ஆரல்வாய்மொழி அருகில் உள்ள முப்பந்தலில் ஔவையாருக்கு தனிக்கோவில் உள்ளது. இங்கே ஔவையாரின் உருவச்சிலையை வழிபடுவதோடு ஆடிமாசத்தில் ஔவை நோன்பு என்று திரளாக பெண்கள் நோன்பிருக்கிறார்கள்.
திருப்பாவை பாடிய ஆண்டாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்டமான கோவிலும் அவள் தோழிகளுடன் உலவிய நந்தவனமும் மடவார்வளாகமும் காணப்படுகிறது
பழனி கோவிலின் பிரகாரத்தில் சித்தர்களில் மிக முக்கியமானவரான போகருக்கு வழிபாடு உள்ளது போகர் தான் சீனாவிற்கு சென்று மருத்துவ முறைகளையும் ரகசியமான போர்கலையையும் கற்பித்தார் என்ற நம்பிக்கை இன்றும் இருந்து வருகிறது.
திருவழுந்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு தனிசன்னதி காணப்படுகிறது. தன் மனைவியோடு கம்பன் திருவுருவச்சிலை இங்கே காணப்படுகிறது. திருவழுந்தூர் கம்பன் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையை அடுத்த திருவாதவூரில் திருவாசகம் இயற்றிய மாணிக்கவாசகருக்கு வழிபாடும் பூஜைகளும் செய்யப்படுகின்றன .
இது போலவே மதுரை பல்கலைகழகத்திற்கு நேர் எதிரில் உள்ள பெருமாள்மலையில் சீவகசிந்தாமணியை திருத்தக்க தேவர் அரங்கேற்றிய இடம் என்றொரு குகை உள்ளது.இங்கே சமணபடுகைகள் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் சமண துறவிகள் கற்றுக் கொள்ளும் பாடசாலையாக செயல்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள் அங்கே காணப்படுகின்றன.
குறிப்பாக கற்றுத்தரும் ஆசிரியருக்கு என்று தனியான கல்லால் ஆன படுக்கையும் மாணவர்களும் ஒன்று சேர்ந்தது போல வரிசையான படுக்கைகளும் காணப்படுகின்றன. குகையின் உள்ளேயே ஒரு நீருற்று காணப்படுகிறது. மிக அழகான சமண திருவுருவங்கள் சிற்பங்களாக செதுக்கபட்டிருக்கின்றன.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு திருவண்ணாமலை கோவிலில் தனியாக ஒரு சன்னதி காணப்படுகிறது. அதுபோலவே நம்மாழ்வாருக்கு அவர் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி கோவிலில் சன்னதி உள்ளது.
இதுபோல இன்னும் அறிந்தும் மறந்தும் போன நிறைய கவிஞர்களுக்கு ஆலயபிரகாரத்தில் தனியான வழிபாடுகள், சன்னதிகள் இருக்ககூடும். இதில் எத்தனை கவிஞர்கள் கோவில்களுக்கு செல்பவர்களின் கண்ணில் பட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை கண்ணில்பட்டிருந்தால் கூட கன்னத்தில் போட்டுக் கொண்டு கடந்து போய்விடுவதை தவிர வேறு எதுவும் நடந்திருக்காது.
வளமையான தமிழ்செவ்வியல் கவிதைகளை மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய மிக முக்கியமான காலமிது. நூற்றுக்கணக்கான தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் எவர் கவனத்திற்கும் உள்ளாகாமல் தூசியடைந்து கிடக்கின்றன. சங்க கவிதைகள் துவங்கி தமிழ் காப்பியங்கள் வரை இன்று புதிய பார்வையோடு விளக்கத்தோடு எடுத்து சொல்லப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

tamil - summa oru news

குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘!

நாகப்பட்டினம் அருகே சுனாமி பேரழிவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் வரும் வாணகிரி என்ற சிறிய கடற்கரை கிராமத்தில் பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விடுபவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் யாரும் படிப்பை இடையிலேயே விட்டு விடக்கூடாது என்பதில் அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவியின் தீவிர அக்கறையும் அதற்குக் காரணம் என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். சுனாமி பேரழிவில் 52 பேரை காவு கொடுத்த சீர்காழி தாலுகாவில் உள்ள வாணகிரி என்ற அந்த கிராமம் அந்த கோரச்சுவடுகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்பதை அந்த ஊரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பார்த்தாலேபோதும். சுனாமிக்குப் பிறகு நடந்த தேர்தலில் அந்த ஊருக்கு புதிதாக பெண் பஞ்சாயத்துத் தலைவியைக் கொண்டு வந்திருக்கிறது.

பொதுவாக பஞ்சாயத்துகளில் பெண்கள் தலைவராக வந்தால், அவரது சார்பில் கணவரே மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால், முதல் முறையாகப் போட்டியிட்டு வாணகிரி பஞ்சாயத்து தலைவியாகி இருக்கிறார் குமாரி (54 வயது). அவரது கணவர் கலியபெருமாள் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர். ஆனால், தனக்குக் கிடைக்காத பேரும் புகழும் தனது மனைவியின் செயல்களால் அவருக்குக் கிடைப்பதை பார்வையாளர் போல ஒதுங்கி நின்று புன்முறுவல் பூக்கிறார். நான்கு பெண் குழந்தைக்குத் தாயான குமாரி, வீட்டுப் பொறுப்புகளை பெண் குழந்தைகளிடம் ஒப்படைத்து விட்டு பொதுக் காரியங்களில் யாரையும் எதிர்பாராமல் தானே முன்முனைப்புடன் செயல்படுகிறார். யாரையும் எதிர்பார்க்காமல் மக்களைச் சந்தித்து பிரச்சினைகளைத் தீர்க்க நினைக்கிறார். மீனவர் குடும்பப் பெண்மணியான அவரது குழந்தைகள் அனைவரும் பிளஸ் டூ படிப்பைத் தாண்டி விட்டனர். ஒரு மகளை எம்.எஸ்சி., எம்.பில். அளவுக்கு படிக்க வைத்திருக்கிறார். தனது குழந்தைகளை படிக்க வைத்தது போல, ஊரில் உள்ளவர்களின் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்.

கல்வியும் சுகாதாரமும் மட்டுமே அந்த கிராமத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும் என்பதை உறுதியாக நம்பும் அவர், குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பை இடையிலேயே விட்டு விடக்கூடாது என்பதில் கூடுதலாக அக்கறை செலுத்தி வருகிறார். இந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளியும் நடுநிலைப் பள்ளியும் உள்ளது. யாராவது பெண் குழந்தைகள் படிப்பை இடையிலேயே விட்டு விட்டால், அவர்களது பெற்றோர்களுடன் பேசி பிரச்சினையைக் கேட்டறிந்து அந்தக் குழந்தைகளை பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது அவரது வாடிக்கை. பிரதமரின் சுனாமி நிவாரண நிதியிலிருந்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மாதத்திற்கு 300 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு இருந்த சிக்கல்களைப் போக்கி, தொடக்கப் பள்ளியில் 68 பெண் குழந்தைகளும் நடுநிலைப் பள்ளியில் 138 பெண் குழந்தைகளும் பெறுவதற்கு உதவியிருக்கிறார் அவர்.

வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கிறார். தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விரும்பும் மாணவிகளுக்கு தையல், எம்பிராய்டரி, பொம்மைகள் செய்தல் போன்ற கைத்தொழில்களைக் கற்றுத்தரவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார், அரசு அறிமுகப்படுத்தியுள்ள இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் ஒரு தொண்டு நிறுவனம் கொடுத்த கம்ப்யூட்டர்கள், அந்த பள்ளி மாணவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பத்தின் புதிய வாசல்களை அறிமுகம் செய்துள்ளன. ஊரில் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக கல்விக்குழுவை சீராக இயங்கச் செய்துள்ளார் குமாரி, இந்தக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், மீனவர் பஞ்சாயத்து உறுப்பினர்களையும் இக்குழுவில் அமர்த்தியுள்ளார். இதனால் ஈகோ பிரச்சினைகள் இல்லாமல் பணிகள் நடக்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள வசதி படைத்தவர்களிடம் புரவலர் திட்டத்தின் கீழ் பள்ளி வளர்ச்சி நிதிக்காக இதுவரை 60 ஆயிரம் ரூபாய் வரை திரட்டியுள்ளார் குமாரி. விளையாட்டு முறையில் மகிழ்ச்சிகரமான கற்பித்தல் முறையை சிறப்பாகச் செயல்படுத்தியதால், மாவட்ட அளவில் இந்த ஊரில் உள்ள பள்ளிக்கு சிறப்புக் கிடைத்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வருகிற வருமானத்தின் பெரும் பகுதியை கந்துவட்டிக்கே கொடுத்து விட்டு சோகத்தில் ஆழ்ந்து கிடந்தன பல மீனவக் குடும்பங்கள். தொடக்கத்தில் ஊர் பஞ்சாயத்துக்கார்களின் எதிர்ப்பையும் மீறி அந்த ஊரில் அவர் சுய உதவிக்குழுக்களைத் தொடங்கினார். இப்போது அந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் கந்துவட்டி சிக்கலிலிருந்து மீண்டு வந்து விட்டன. இதனால், கடன் சிக்கல்களில் இருந்து மீண்ட குடும்பங்களில் குழந்தைகளின் படிப்புக்கான தடைகளும் குறைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

tamil - athu oru kanaa kalam

nila nila odi vaa
azhagu nila odi vaa
goyya maram yeri vaa
gundu pazham kondu vaa
paathi pazham ennidam
paathi pazham unnidam
koodi sernthu iruvarum
korithu korithu thinnalam

mambazhamam mambazham
malgova mambazham
selathu mambazham
thithikkum mambazham
alva pola mambazham
koodi sernthu anaivarum
pangu potu thinnalam

tamil - thirukoathumbi - thiruvasagam

திருக்கோத்தும்பி

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ.

நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார் வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச் கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும் பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக் கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம் சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந் தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந் தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம் தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார் ஆன கருணையும் அங்குற்றே தானவனே கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.

கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான் தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

tamil - engal veetin mudhal irapu

வீட்டில் ஒருவனாய் இருந்தவன் இன்று ஒதிங்கி சென்றுவிட்டான்
எங்களின் பாசம் புரியாது உங்களுக்கு
கண்களால் பேசி காதல் செய்தவன்
இன்று காலனுக்கு இரையாகிவிட்டான்
நான் தெருமுனை செல்லும் வரை இனி யார் வாசலில் நின்று பார்ப்பது
நான் வாசல் கதவருகே வந்தால் இனி யார் வந்து வாலாட்டி வரவேற்பது என் மடிதனில் புரள்வது பிடிக்கும்
இன்று என்னை விட மரணம் பிடித்துவிட்டது போலும்
குரைத்து என்னுடன் விளையாடியவன்
இன்று எனை மௌனமாக்கி சென்றுவிட்டான்
என் மேல் உயிராய் இருந்தவன்
இன்று உயிரற்று கிடக்கிறான்
எனை மீண்டும் சிறுபிள்ளை மனதிற்கு கொண்டு வந்தவன்
இன்று மண் சிறைக்குள் சென்றதேனோ!

tamil - history - pongal thiruvizha

Pongal is an ancient festival of the Tamils. It is not known when exactly the Tamils began celebrating the festival, but some historians identify it with the Thai Un and Thai Niradal, believed to have been celebrated during the Sangam Age (200 B.C. to 300 A.D). Pongal, a traditional Tamilian food item that has found a place in the menu of Indian restaurants across the globe, is perhaps the only dish to have lent its name to a festival.
As part of the festivities, maidens of the Sangam era observed penance (Pavai nonbu) during the Tamil month of Margazhi (December-January). Throughout the month, they avoided milk and milk products. They would not oil their hair and refrained from using harsh words while speaking.
The women had their ceremonial baths early in the morning.
They worshipped the image of Goddess Katyayani, which would be carved out of sand. They ended their penance on the first day of the month of Thai (January-February). This penance was to bring abundant rains and agricultural prosperity for the country.
Thai Niradal was a major festival during the reign of the Pallavas (4th to 8th Century A.D.). Andal's Tiruppavai and Manickavachakar's Tiruvembavai vividly describe the festival. According to an inscription found in the Veeraraghava temple at Tiruvallur, the Chola king Kiluttunga used to gift lands to the temple specially for the Pongal celebrations.
Pongal or Thai Pongal is also called Makara Sankaranthi, since it is celebrated on the first day of Thai when the Sun enters the Makara Rasi (Capricornus).
This signals the end of winter and the onset of spring throughout the northern hemisphere. For the next six months, the days are longer and warmer.
The period is referred to as Uttarayan Punyakalam and is considered auspicious. Legend has it that the Devas wake up after a six-month long slumber during this period. And so it is believed that those pass away during Uttarayana attain salvation. In fact, Bheeshma is believed to have waited for the dawn of Uttarayana before he gave up his life.
Pongal is a four-day affair. The first day, Bhogi, is celebrated on the last day of the month of Margazhi. On this day, people decorate their homes. New vessels are bought and old and unwanted things burnt. Of late, environmentalists have pointed out that these bonfires pollute the atmosphere. And often, flights are delayed due to poor visibility because of the smog created by the bonfires.

Scholars have often compared Bhogi to the Indra Vizha celebrated by the Chola kings at Kaveripattinam, also known as Poompuhar. Indra Vizha was celebrated in honour of Lord Indra, also called Bhogi, the God of thunder and rain.
It is also compared to Bhogali Bihu, the harvest festival of Assam, celebrated in January. Assamese build thatched pavilions where they have grand feasts. The pavilions are burnt down the following day, as part of the festivities.
The second day is Perum Pongal, the most important. It is also called Suryan Pongal because people worship Surya, the Sun God and his consorts, Chaya and Samgnya. Women decorate the central courtyard of their homes with beautiful kolams, done with rice flour and bordered with red clay.
Plantain leaves are placed on the kolam on which vegetables and other farm products such as sugarcane, turmeric bulbs and coconuts are arranged.
The offerings (padayals) are usually five in number, one each for Ganesha, Surya, Indra, Agni and the sacred lamp. A tiny idol of Ganesha, made of turmeric paste, is also placed near these offerings.
The pongal dish is cooked exactly at the moment when the new month is born. Traditionally, it was cooked on a hearth specially built for the occasion. Of course, these days, the hearth has been replaced by the gas-stove. The pot in which the food item is prepared, is adorned with flowers, turmeric roots and leaves.
There are several legends associated with Perum Pongal. A sage named Hema prayed to Lord Vishnu on the banks of the Pottramarai tank in Kumbakonam. On Perum Pongal day, the lord is believed to have taken the form of Sarangapani and blessed the sage. Yet another legend has it that Lord Shiva performed a miracle where a stone image of an elephant ate a piece of sugarcane!
The third day is Mattu Pongal, celebrated to glorify cattle that help farmers in a myriad ways. On this day, the cows are bathed and decorated with vermilion and garlands and fed.
In certain villages in southern Tamil Nadu, a bullfight called manji-virattu is held in the evening.
Bags of coins are tied to the sharpened horns of ferocious bulls that are let loose in an open ground.
The young men of the village vie with each other to subdue the bull and grab the bags tied to the horns.
In fact, in ancient Tamil literature, men had to subdue the bull in order to win the hand of a fair maiden and even Lord Krishna is believed to have defeated seven bulls before marrying Nappinnai. Unlike in the Spanish bullfights, in manji-virattu, the bull is never killed.
Mattu Pongal has little significance to city folks. In most urban homes, the day is celebrated as Kannu Pongal. Special prayers are offered by women for the well-being of their brothers.
The Tamils also remember the poet Tiruvalluvar, who was born on this. The last day is Kaanum Pongal. It is that part of the festival when families used to gather on the riverbanks and have a sumptuous meal (kootanchoru).
It is also time for some traditional dances such as kummi and kolattam. In recent years, that day is celebrated as Uzhavar Tirunal in honour of farmers.

tamil - kanavil vanthan koovindsami

என்கனவில் வந்த கோயிஞ்சாமி கொஞ்சம் கேள்விகள் கேட்டார். எனக்கு வழக்கம் போல பதில் தெரியவில்லை. (கோனார் இதற்கு இன்னும் விடைப் புத்தகம் போட வில்லையாம்)............

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

6. இருட்டின் வேகம் என்ன..?

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

இவ்வளவு தான் கேட்டார்...........................

tamil - narukhugal

முரண்
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை நாயே!பன்றியே!குரங்கே!

அடக்கம்
அடக்கம்செய்யப்படுகிறோம்...
இரண்டுபெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்தொலைக்காட்சிப் பெட்டியிலும்

நாற்காலி
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

உலகமைதி
மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

பெண்
ஏடுகளில் முன்பக்கத்தின்அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்அடுப்பங்கரையில்

குப்பைத்தொட்டி
அலுவலகத்தில் இருக்கிறவனுக் இதுகுப்பை
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு இதுஅலுவலகம்

மாவீரன்
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்

தளை
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர

கோயில்
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு