tamil - narukhugal

முரண்
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை நாயே!பன்றியே!குரங்கே!

அடக்கம்
அடக்கம்செய்யப்படுகிறோம்...
இரண்டுபெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்தொலைக்காட்சிப் பெட்டியிலும்

நாற்காலி
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

உலகமைதி
மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

பெண்
ஏடுகளில் முன்பக்கத்தின்அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்அடுப்பங்கரையில்

குப்பைத்தொட்டி
அலுவலகத்தில் இருக்கிறவனுக் இதுகுப்பை
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு இதுஅலுவலகம்

மாவீரன்
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்

தளை
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர

கோயில்
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு

No comments: