tamil - engal veetin mudhal irapu

வீட்டில் ஒருவனாய் இருந்தவன் இன்று ஒதிங்கி சென்றுவிட்டான்
எங்களின் பாசம் புரியாது உங்களுக்கு
கண்களால் பேசி காதல் செய்தவன்
இன்று காலனுக்கு இரையாகிவிட்டான்
நான் தெருமுனை செல்லும் வரை இனி யார் வாசலில் நின்று பார்ப்பது
நான் வாசல் கதவருகே வந்தால் இனி யார் வந்து வாலாட்டி வரவேற்பது என் மடிதனில் புரள்வது பிடிக்கும்
இன்று என்னை விட மரணம் பிடித்துவிட்டது போலும்
குரைத்து என்னுடன் விளையாடியவன்
இன்று எனை மௌனமாக்கி சென்றுவிட்டான்
என் மேல் உயிராய் இருந்தவன்
இன்று உயிரற்று கிடக்கிறான்
எனை மீண்டும் சிறுபிள்ளை மனதிற்கு கொண்டு வந்தவன்
இன்று மண் சிறைக்குள் சென்றதேனோ!

No comments: